search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு வெடிகுண்டு"

    • நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வினீஷ், ஷெரின் இருவரும் படுகாயமடைந்தனர்.
    • நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பானூர் புளியந்தோடு பகுதியை சேர்ந்தவர் வினீஷ்(வயது25), புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் ஆவர்.

    இந்நிலையில் இவர்களின் ஒருவரது வீட்டின் மாடியில் இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வினீஷ், ஷெரின் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ஒருவரின் கைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொருவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு கண்ணூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு வெடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கண்ணூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
    • 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த வீ.கே.புதூர் அருகே உள்ள வீராணம் சாலையில்

    வீ.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் நபர் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் சுரண்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த நாக ராஜா(35) என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாக அவர் தெரிவித்தார்.

    மேலும், அதில் 2 குண்டுகளை சுரண்டையை சேர்ந்த மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாகவும், 3 குண்டுகளை கடந்த 30-ந்தேதி வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் செய்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து சுரேஷ், நாகராஜா, கார்த்திக், மனோ சங்கர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
    • உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
    • அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

    சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

    இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தலை சிதறி மாடு இறந்தது.
    • புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் புலிகள் வன காப்பக பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரண மாக வனத்துறையினர் வனப்பகுதியில் பொது மக்கள் செல்ல கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    கடந்த ஆண்டு ஸ்ரீவில்லி புத்தூர் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதை யடுத்து போலீசார் வனப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர ராஜபுரம் மேற்கு பகுதியில் சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றது. இரவு நீண்ட நேரமாகியும் அது திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சண்முக ராஜ் மாட்டை தேடிச் சென்றார். அப்போது புதுக்குளம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாடு இறந்து கிடந்தது. வாய் கிழிந்த நிலையில் மாட்டின் தலை சிதறியிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டை கடித்ததில் மாடு பலியாகி இருப்பது தெரியவந்தது.

    புதுக்குளம் பகுதியில் நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்? நாச வேலைக்கு திட்டமிடப் பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.
    • மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே தாயனூர் பகுதியில் ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    அப்போது அதவத்தூர் சந்தை புதிய கட்டளை வாய்க்கால் அருகாமையில் சந்தேகம்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விடாமல் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.

    பின்னர் அங்கு மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.

    கைதானவர்கள் சோமரசன்பேட்டை தாயனூர் கீழக்காடு கீழபுறம் பகுதியை சேர்ந்த சிவசக்தி (வயது 21), தாயனூர் வடக்கு தெருவை சேர்ந்த கர்ணன் (23) என்பது தெரியவந்தது.

    மேலும் பிடிப்பட்ட 2 வாலிபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    யார் யாருக்கு அவர்கள் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்தார்கள் என்று புலன் விசாரணை நடந்து வருகிறது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ரெயில்வே ஊழியர். அவரது மனைவி இனியவள் (வயது 52) இவர்களுக்கு ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் குகன் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஓய்வு பெற்ற சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அவரது மகன் குகன் தந்தையின் ரெயில்வே பணியில் சேர்ந்தார். அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு பைக்கில் ஹெல்மெட் போட்டு கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பல்புகள் மற்றும் கதவு உடைந்து சேதமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது 2 பேர் தப்பி சென்று விட்டனர்.

    இனியவள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனார்.

    வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    அங்கு வெடித்து சிதறிய வெடியின் துகள்கள் ஆகியவற்றை கைபற்றினர். நாட்டு சரவெடி வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமறைவான 2 பேரையும் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை தவுபிக்கை கைது செய்தனர்.
    • வழக்கில் முக்கிய நபரான சல்மானை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை வேளாங்கண்ணி நகர் தென்புறம் உள்ள வயல் பகுதியில் வாலிபர்கள் சிலர் நின்றனர்.

    போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்ற போது ஒருவர் சிக்கினார். மற்ற 2 வாலிபர்களும் தப்பியோடினர். பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் டவுன் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித்(வயது 19) என்பதும், தப்பியோடியவர்கள் அவரது நண்பர்களான டவுன் கிருஷ்ணபேரியை சேர்ந்த மாரி செல்வன் என்ற சல்மான், குற்றாலம் சாலையை சேர்ந்த தவுபிக் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் 3 பேரும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்க செய்து தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரையும் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை தவுபிக்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய நபரான சல்மானை தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் தான் மேற்கொண்டு விபரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்மநபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.
    • முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரது மனைவி சரளா (44). இவர்கள் 2 பேரும் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மதுமிதா, ஜனனி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    நேற்று இரவு இவர்கள் வீட்டின் இரும்பு கதவை பூட்டி விட்டு மெயின் கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரையை போட்டிருந்தனர்.

    இவர்கள் அனைவரும் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. சற்று நேரத்தில் மின்சாரம் வந்தது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது.

    முருகானந்தம் வீட்டில் இருந்த மின் விசிறி ஏற்கனவே பழுதாகி இருந்தது. எனவே, மின் விசிறிதான் வெடித்து இருக்கும் என நினைத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டது. உடனே 4 பேரும் பயந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டு வாசலில் சணல், சிறிது சிறிதான ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த திரை சிலையும் கருகி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்மநபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் அங்கு வந்தார். அவர் முருகானந்தம், அவரது மனைவி சரளா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினார்.

    உங்கள் குடும்பத்தினருடன் யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு சிதறி கிடந்த சணல், ஆணிகளை கைப்பற்றி பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் முருகானந்தம் வீட்டுக்கு வந்தவர்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
    • நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்கச்செய்து அதனை தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்ததும் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை டவுன் போலீஸ் நிலைய போலீசார் நேற்று முன்தினம் டவுன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டவுன் அன்னை வேளாங்கண்ணிநகர் தென்புறம் உள்ள வயல்காட்டு பகுதியில் வாலிபர்கள் சிலர் நின்றுகொண்டு இருந்தனர்.

    இதை பார்த்த போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் டவுன் அரசன் நகரை சேர்ந்த காளியப்பன் மகன் ரஞ்சித் (வயது 19) என்பதும் தப்பி சென்ற நபர்கள் ரஞ்சித்தின் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்கச்செய்து அதனை தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ரஞ்சித்தின் நண்பர்களான கிருஷ்ணபேரியை சேர்ந்த மாரிசெல்வன் என்ற சல்மான், தவுபிக் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். வாலிபர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது. தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு வெடித்து சிதறி கிடந்த பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவர்கள் வீசியது திருவிழாகாலத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு பட்டாசு என்பது தெரிந்தது.

    கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கானாபாட்டு பாடல் பாடிய தாவரவியல் படிக்கும் மாணவர்களை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக நேற்று காலை கல்லூரிக்கு வந்த தனுஷ் மற்றும் உடன் படிக்கும் நண்பர்கள் எதிர்தரப்பு மாணவர்கள் மீது பூண்டு பட்டாசை கொளுத்தி போட்டு இருப்பது தெரிந்தது.

    இந்த மோதல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 18 மாணவர்களை நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர், 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் ஆகும். இதற்கிடையே மோதலில் ஈடுபட்டதாக 10 மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் கோஷ்டிகளாக மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் யார்?யார்? என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
    • கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்று விட்டனர். இதில் அந்த நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்று கொண்டு இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×